தூத்துக்குடி விமான நிலையத்தில் விமானம் கடத்தப்பட்டால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஒத்திகை நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் இன்று நடைபெற்றது.
இந்நிகழ்வின் போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், விமான நிலைய இயக்குநர் (பொ) பிரான்சிஸ் சேவியர், விமான நிலைய போக்குவரத்துத் துறை கட்டுப்பாட்டு அலுவலர் ராஜேந்திரன், விமான நிலைய அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.