தவெக தலைவர் விஜய கடந்த 26 மற்றும் 27 ஆம் தேதி கோவையில் பூம் கமிட்டி மாநட்டை நடத்தினார், அப்போது மாநாட்டிற்கு செல்வதற்கு முன்பு தனது வாகனத்தில் விஜய் பேரணி சென்ற போது தவெக தொண்டர் ஒருவர் மரத்தில் இருந்து குதித்து வேன் மீது ஏறிய சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியது, இது மட்டுமில்லாமல் விஜயை காண ஆர்வம் காட்டி வந்த சில பேர் விபத்தில் சிக்கிய சம்பவங்களும் அரங்கேறின, தவெக தொண்டர்கள் செயல் பலராலும் விமர்சிக்கப்பட்டது.

விஜய் அறிக்கை:

இந்த நிலையில் தொண்டர்களின் செயல்கள் குறித்து விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார், அதில் என் நெஞ்சில் குடியிருக்கும் என் உயிரினும் மேலான தோழர், தோழியர் அனைவருக்கும் வணக்கம். மூன்று தினங்களுக்கு முன், கோவையில் நடைபெற்ற நம் தமிழக வெற்றிக் கழகத்தின் வாக்குச் சாவடி முகவர்களின் கருத்தரங்கில் கலந்துகொள்ள வந்த என்னை உங்கள் அளவு கடந்த அன்பால் நனைய வைத்தீர்கள்! I love you Kovai and Kongu Thangams.
 
நம் மீது இத்துணை அன்பைக் காட்டும் உங்களுக்கும் மக்களுக்கும், உண்மையான மக்களாட்சியையும் உண்மையான ஜனநாயக அதிகாரத்தையும் மீட்டுத் தருவதுதான் நாம் காட்டும் அன்புக் காணிக்கையாக இருக்கும். 2026 சட்டமன்றத் தேர்தல் வெற்றியால் இதை நிச்சயம் நிறைவேற்றிக் காட்டுவோம். இந்த மகிழ்ச்சியான தருணத்தில் தமிழகமெங்கும் உள்ள நம்முடைய இளம் தோழர்களுக்கு  என்னுடைய அன்பு வேண்டுகோள்கள் சில உண்டு. அவை அன்புக் கட்டளைகளாகவும் இருக்கும் என்பதிலும் சந்தேகம் இல்லை. நம்முடைய இளைய தோழர்கள், நமது வாகனங்களை இரு சக்கர வாகனங்களில் தலைக் கவசமின்றி வேகமாகப் பின்தொடருவது, பாதுகாப்புக் குழுவினரை மீறி வாகனத்தின் மீது ஏறுவது, குதிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டது எனக்கு மிகவும் கவலையை அளித்தன. அதனால இப்ப கொஞ்சம் உங்ககிட்ட மனசு விட்டு பர்சனலா பேச விரும்பறேன்…
 
நம்ம பயணத்தப்ப ஆம்புலன்ஸ் வந்ததும் அதுக்கு வழிய சரிபண்ணிவிட்ட உங்க செயல பாராட்டியே ஆகணும்…அதுதான் நீங்க… இப்டில்லாம் செய்ற நீங்க, அன்பின் காரணமா செய்ற சிலதையும் சொல்லி ஆகணும்… உங்களோட அன்ப புரிஞ்சுக்கறேன் ஃப்ரெண்ட்ஸ்… அதுக்கு நான் தலைவணங்கவும் செய்யறேன்… ஆனா எப்பவுமே நம்மளோட அன்பை வெளிப்படுத்துற விதம், அதீதமாகவே இருந்தாலும் அது மத்தவங்களுக்கு முன்னுதாரணமாத்தான் இருக்கணும்…
 
எல்லாத்துக்கும் மேல உங்களோட பாதுகாப்புதான் எனக்கு ரொம்ப முக்கியம்… நீங்கதான் எனக்கு precious… இவ்ளோ அன்போட இருக்கிற நீங்க எனக்குக் கிடைச்சதுக்கு நான் என்ன தவம் செஞ்சேன்னு எனக்குத் தெரியல… உங்கள நான் கை கூப்பித் தலைவணங்கிக் கேட்டுக்கிறதெல்லாம் ஒண்ணே ஒண்ணுதான்… உங்க அன்ப நான் மதிக்கறேன்… இனி எப்பவும் மதிப்பேன்… அதேபோல நீங்களும் என்மேல அன்போட இருக்கறது உண்மைன்னா எப்பவும் இதுபோல இனி நீங்க செய்யவே கூடாது… நான் இங்கே சொல்லி இருக்கற மாதிரி, இத நீங்க கட்டளையாகவோ கண்டிப்பாகவோ கூட எடுத்துக்கங்க…தப்பே இல்ல… நம்ம அரசியல்ல கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டோட கண்டிப்பும் self discipline-ம் 100% சமரசமற்றதாத்தான் இருக்கணும் ஃப்ரெண்ட்ஸ்… அதுதான் நம்ம அரசியலுக்கும் நல்லதுன்னு உங்களுக்கே தெரியும்... இனி அடுத்தடுத்து நம்ம மக்கள சந்திக்கிற நிகழ்ச்சிகளெல்லாம் இருக்கறதால நான் சொல்றத நீங்க இனிமே ஸ்ட்ரிக்ட்டா ஃபாலோ செய்வீங்கன்னு நம்பறேன்… செய்வீங்க… செய்றீங்க… ஓகே?... Thank u friends…. Love you all… என்று அறிக்கையில் ரசிகர்களுக்கு கட்டளை விடுத்துள்ளார்.
 
Read more
இளையராஜா மாதிரி உலகத்துலயே ஆள் கிடையாது... அது ஏன்னு தெரியுமா? தயாரிப்பாளர் சொன்னதைப் பாருங்க...
Newspoint
இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு புதிய விதிமுறை: இனிமேல் 02 ஹெல்மெட்டுகள் கட்டாயம்: மத்திய அரசு உத்தரவு..!
Newspoint
காதல் திருமணம் செய்த இளம்பெண் எடுத்த விபரீத முடிவு...சோகத்தில் மூழ்கிய கிராமம்!
Newspoint
ஆணாதிக்க முறை பிரதிபலிப்பா.? பாஸ்போர்ட் பெற பெண்களுக்கு கணவனின் அனுமதி தேவையில்லை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!
Newspoint
வழிபாட்டு தலங்களில் அரைகுறை ஆடைகளுக்கு தடை விதிக்க வேண்டும்..அதிமுக வலியுறுத்தல்!
Newspoint
சென்டாக் இறுதி கவுன்சிலிங் முடியும் வரை முதலாம் ஆண்டு வகுப்புகளை துவக்க கூடாது..திமுக வலியுறுத்தல்!
Newspoint
'சட்டவிரோத பங்கு, கருணாநிதி கேட்ட கேள்வி' - முரசொலி மாறன் குடும்ப பிரச்னையின் முழு பின்னணி
Newspoint
கதறும் மக்கள்... இஸ்ரேலில் குடியிருப்புகளின் மீது கிளஸ்டர் குண்டுகள்!
Newspoint
குபேரா படத்தில் பிளஸே இல்லையா... மைனஸ்களை லிஸ்ட் போடும் பிரபலம்!
Newspoint
சிறு கவனக் குறைவு இப்படியோர் சீரழிவைத் தருமென நினைக்கவில்லை! - மகனின் மன்னிப்பு | #உறவின்கடிதம்
Newspoint