ஒடிசாவில் நீண்ட நாட்களாக கிராம பெண்களுக்கு 60 வயது நபர் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் கும்பல் ஒன்று சேர்ந்து அவரை கொன்று உடலை எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 8 பெண்கள் உட்பட மொத்தம் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜூன் மூன்றாம் தேதி அன்று பாதிக்கப்பட்ட பெண்கள் பாலியல் தொல்லை கொடுத்த நபரின் வீட்டிற்கு சென்று அங்கு வைத்து வீட்டில் அவரை வெட்டி கொன்று எரித்துள்ளனர். இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில் அந்த நபர் கடந்த 4 ஆண்டுகளாக பல கிராம பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரிய வந்தது.
இதில் கைது செய்யப்பட்ட பெண்களில் குறைந்தது 6 பேர் தாங்கள் பாதிக்கப்பட்டவர்கள் என்று ஒப்புக்கொண்டுள்ளனர். இதே போன்று தொடர்ச்சியான சம்பவங்களுக்கு முடிவு கட்டவே இந்த முடிவை எடுத்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
காவல்துறையினர் உடலின் எஞ்சிய பாகங்களை மீட்டு எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண்கள் இதற்கு முன்பு எந்த விசாரணையும் அளிக்கவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.